தேங்காய் சாப்பாடு & ஆட்டு தலை கறி குழம்பு

தேங்காய் சாப்பாடு & ஆட்டு தலை கறி குழம்பு

தேவையான பொருட்கள் :

அரிசி - 1 கப்
தேங்காய் (துருவியது) - 1/2 கப்
தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
பெருங்காய பொடி - 1/4 ஸ்பூன்க்கும் குறைவாக (இனுக்கு )
பச்சை மிளகாய் - 2
வறமிளகாய் - 3
கருவேப்பிலை - 6
முந்திரி பருப்பு - 6
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1. அரிசியை மூன்று முறை நன்றாக கழுவ வேண்டும். ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர்க்கு மேல் ஊற்ற வேண்டாம்.

2. குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்தால் போதும் சாப்பாடு நல்லா பொலபொல என உதிரியாக இருக்கும்.

3. வாணலியில் அரை ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி முந்திரி பருப்பையும் , உளுந்த பருப்பையும் தனி தனியா பொன் நிறம் வரும் வரைக்கும் வறுத்து தனியா எடுத்து வைத்துக்கொள்ளவும்.

4. இப்போது தேங்காய் எண்ணையை வாணலியில் ஊற்றி கடுகு , கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்

5. பிறகு பச்சை மிளகாய் , வறமிளகாய் , கருவேப்பிலை , பெருங்காய பொடி , உப்பு, எல்லாம் போட்டு ஒரு 10 செகண்ட் தாளித்து, துருவிய தேங்காய் , வறுத்து வைத்திருக்கும் முந்திரி, உளுந்த பருப்பையும் போட்டு நன்றாக கலந்து விடவும்

6. இப்போது சாதத்தை போட்டு இரண்டு முறை
கிளறிவிடவும்.

தேங்காய் சாப்பாடுகு நல்ல சைட் டிஷ்
ஆட்டு தலை கறி குழம்பு

தேவையான பொருட்கள்:

ஆட்டுத்தலை- 1
வெங்காயம் -மூன்று
தக்காளி -இரண்டு
இஞ்சி பூண்டு விழுது -இரண்டு ஸ்பூன்
கசகசா -ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் -ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் -4
கறிவேப்பிலை -ஒரு கொத்து
சோம்பு -ஒரு டீஸ்பூன்
லவங்கம் , கிராம்பு,பட்டை , மொக்கு -சிறிதளவு
மிளகாய் தூள் -5 டேபிள் ஸ்பூன் (அவரவர் காரத்தை பொறுத்து)
முந்திரி பருப்பு-50 கிராம்
உப்பு
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள்-ஒரு டீஸ்பூன்

செய்முறை:

1.ஆட்டு தலையை சுட்டு முடிகளை பொசுக்கி சுத்தம் செய்து வைத்திருக்கிற தலையை இரண்டாக வெட்டி தரச் சொல்லி வாங்கி வந்து சுத்தமாக கழுவி ஒரு பெரிய பாத்திரத்தில் தலை முழுகும் அளவு தண்ணீர் விட்டு சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.

2.இதற்கு நடுவில் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ளவும். கசகசா , தேங்காய் , முந்திரி பருப்பு ஆகியவற்றை அரைத்து வைத்துக்கொள்ளவும்.

3. ஆட்டுத் தலை நன்றாக வெந்ததும் இறக்கி சூடு ஆறியதும் எலும்பையும் கறியையும் தனி தனியாக எடுக்கவும். மிக சுலபாக வந்துவிடும். பின்பு தேவையான அளவில் கறியை துண்டுகள் போட்டுக்கொள்ளவும்.

4. அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து, எண்ணை ஊற்றி லவங்கம், பிரிஞ்சி இல்லை , மொக்கு போட்டு வெடிக்க விட்டு பின் வெங்காயம் போட்டு வதக்கவும். சிறிது வதங்கியதும்.

5. தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் அதில் கறியை போட்டு அதில் மஞ்சள் தூள், சோம்பு, மிளகாய் தூள், உப்பு, எல்லாவற்றையும்போட்டு நன்றாக .கிளறி மூடி வைக்கவும்.

6. மசாலா வாசனை போனதும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

7.குழம்பு நன்றாக கொதித்து வாசனை வந்தததும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிண்டவும்.

8.பதினைந்து நிமிடம் கொதிக்க விட குழம்பு கெட்டியாக வரும். அந்நேரம் கறிவேப்பில்லை போட்டு இறக்கி வைக்கவும். சுவையான தலைக்கறி குழம்பு ரெடி.